தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
X
2 பேர் கைது
குமரி மாவட்டம் இனயம் திருப்பு என்ற பகுதியில் புதுக்கடை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 14. 5 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் புகையிலை பொருட்களுடன் இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த ஜெரின் ஜேக்கப் (29), தேங்காபட்டணம் பகுதி எட்வர்ட் ஜார்ஜ் (63) என்பது தெரிய வந்தது. இவர்கள் அந்த பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக வினியோகம் செய்ய புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரிந்தது. போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story