அனுமதியின்றி கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

X
காங்கேயம் பகுதியில் சட்ட விரோதமாக கற்கள், மற்றும், மணல் கடத்து வதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் திருப்பூர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் காங்கேயம்-முத்தூர் சாலை பிரிவு அருகே அனுமதி இன்றி 9 யூனிட் ஜல்லிக் கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரியை மடக்கி பிடித்தனர். வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் காங்கேயம் போலீசாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

