வழி தவறி சாலையோரம் சுற்றித்திரிந்த மானை பிடித்து காட்டுக்குள் விட்ட கம்பம் வனத்துறையினர்.
தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளி வாசல் பகுதியில் ஒரு மான் வழி தவறி சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் கம்பம் மேற்கு சரக வன அலுவலர் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் மான் சுற்றித்திரிந்த இடத்திற்கு வருகை தந்தனர் மானை சுற்றி வளைத்து பிடித்த போது மானின் உடம்பில் ஒரு சில காயங்கள் இருப்பதைக் கண்டு உடனே மருத்துவரை அழைத்து மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு மானை தேனி மாவட்டம் வருசநாடு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டு வந்தனர். ஊருக்குள் நுழைந்த மானை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டு வந்த கம்பம் மேற்கு வனச்சராக வனத்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Next Story




