ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள் ஆபாச நடனம் குறித்து அர்ச்சகர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி இருவேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள் ஆபாச நடனம் குறித்து அர்ச்சகர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி இருவேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலின் உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் வீட்டில் வைத்து ஆபாச நடனம் குறித்த வீடியோ மற்றும் மாரியம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் முகத்தில் விபூதி அடித்து அத்துமீறி நடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் இக்கோயிலின் உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் மேலும் பணிக்கு வந்த மற்ற அர்ச்சகர்கள் கணேசன்,வினோத், வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சபரிநாதன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாண்டியராஜன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அச்சகர்களை காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது மேலும் ஆபாசமாக நடனமாடிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சபரிநாதன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டமும் தேரடி தெற்கு ராத வீதியில் இருந்து ஊர்வலமாக வந்து கிழக்கு ரத வீதியில் ஆதித்தமிழர்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அர்ச்சகர்கள் மீது பாரபட்சம் இன்றி கைது நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story

