தோப்பூர் காச நோய் மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர்.

மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனையை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
மதுரை அருகே தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள காசநோய் மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் இன்று (ஜூன்.28) காலை திடீர் ஆய்வு செய்தார் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகள் மற்றும் நோய் தன்மைகளை கேட்டறிந்தார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர் அங்கு உணவு தயாரிக்கும் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். தோப்பூர் மருத்துவமனை நிலைய மருத்துவர் Dr லதா, ஜெயகணேஷ். மருத்துவமனை செவிலியர்கள், அடைச்சர் மா.சு. ஆய்வின் போது உடனிருந்தனர்.
Next Story