போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X
மதுரை அருகே ஒத்தக்கடையில் இடையப்பட்டி பயிற்சி காவலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள்.
உலக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒத்தக்கடையில் இன்று (ஜூன்.28) நடைபெற்றது. இதில் இடையப்பட்டி காவலர் பயிற்சி பள்ளியின் கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில் போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து காவலர்களுக்கு எடுத்துரைத்து பேரணியை துவக்கி வைத்தார். முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக காவலர்கள் உறுதி மொழி மேற்கொண்டனர். இந்த பேரணியில் பயிற்சி காவலர்கள் ஒத்தக்கடை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று போதைப் பொருளின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் துணை முதல்வர் மாரியப்பன், ஆய்வாளர் சோமசுந்தரம் உதவி ஆய்வாளர் லோகநாதன், பயிற்சி காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story