தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
X
குழித்துறை
குமரி மாவட்டம் குழித்துறை பகுதி காட்டுவிளையை சேர்ந்தவர் ராபி (51). தொழிலாளியான  இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக ராபியை மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் ராபி தனது  தம்பி சசிகுமார் என்பவரின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவரது வீட்டு முன்பு திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனே அவர் மீட்கப்பட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் ராபி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story