சேலத்தில் பஸ் மோதி உடற்கல்வி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

சேலத்தில் பஸ் மோதி உடற்கல்வி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
X
போலீசார் விசாரணை
சேலம் வீரபாண்டி அருகே உள்ள பச்சைபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி மேகலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முருகன் கடந்த 21-ந் தேதி மோட்டார் சைக்கிளில் கந்தம்பட்டி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story