ஆற்காடு அருகே பாம்பு கடித்து வாலிபர் பலி!

ஆற்காடு அருகே பாம்பு கடித்து வாலிபர் பலி!
X
பாம்பு கடித்து வாலிபர் பலி!
ஆற்காடு தாலுகா, பெரிய அசேன்புரா பகுதியை சேர்ந்தவர் முகமது அசேன் (வயது 27). இவர் 2 நாட்களுக்கு முன்பு செட் டித்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்த பாம்பை பிடிக்க சென்றுள்ளார். அப்போது தான் வைத்திருந்த பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அந்த பாம்பை பிடிக்க முயன்ற போது எதிர்பாரதவிதமாக அவரை பாம்பு கடித்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவம்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவருடைய தாய் கொடுத்த புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story