சேலத்தில் காரில் பேட்டரி திருடிய வாலிபர் கைது

X
சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது காரில் இருந்த பேட்டரி திருட்டு போனது. இது குறித்து அவர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த திருமாறன் (வயது28) என்பவர் காரில் பேட்டரி திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

