அரசு கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்

X
Komarapalayam King 24x7 |30 Jun 2025 5:42 PM ISTகுமாரபாளையம் அரசு கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கிளை நூலகத்தில் நடந்த வாசகர் வட்ட கூட்டத்தில் கிளை நூலகர் மாரியாயி, வாசகர் வட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார்கள்.. . எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஆயிஷா நடராசன், கந்தர்வன் போன்றவர்களின் சிறுகதைகள் குறித்து பேசப்பட்டது. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி பள்ளியில் ஒரு வைரம் என்ற சிறுகதை கூறினார். சரஸ்வதி என்ன ஆச்சு? என்ற கதையை, மாணவி கலைமகள் கூறினார். மேலும் . பல்வேறு மாணவர்கள் சிறுகதை கூறினார்கள். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் பழனிவேல் கதைகள் சொல்லி அசத்தினார். இதில் வாசக வட்ட உறுப்பினர்கள் முகமது, சம்பத், சௌந்தர், முனிராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
