சேலத்தில் மருத்துவ மாணவி தற்கொலை

சேலத்தில் மருத்துவ மாணவி தற்கொலை
X
போலீசார் விசாரணை
கோவை கீழமேடு செங்கப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் லக்சன்யா (வயது 21). இவர், சேலத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்து ஒரு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் விடுதியில் தாய் மணிமேகலையும் தங்கியுள்ளார். நேற்று காலை மணிமேகலை வெளியில் சென்றார். பின்னர் அவர் மதியம் திரும்பி வந்து பார்த்தபோது, விடுதியில் மகள் லக்சன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மருத்துவ மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story