ஆற்காடு துரோபதி அம்மன் கோயிவிலில் தீமிதி விழா

X
ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராசாத்துபுரம் துரோபதி அம்மன் கோயிலில் கடந்த ஜூன் எட்டாம் தேதி முதல் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது. இரவில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. நேற்று இரவு தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

