போச்சம்பள்ளி அருகே ஆடு மேய்த்தவரை வெட்டிய விவசாயி.

போச்சம்பள்ளி  அருகே ஆடு மேய்த்தவரை வெட்டிய விவசாயி.
X
போச்சம்பள்ளி அருகே ஆடு மேய்த்தவரை வெட்டிய விவசாயி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரியகரடியூரில் நாகரசம்பட்டியை சேர்ந்த நாராயண செட்டியாரின் நிலத்தை கரடியூரை சேர்ந்த மாரியப்பன் பராமரித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராஜா அந்த நிலத்தில் ஆடு மேய்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன், ராஜாவை 3 இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த ராஜா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ராஜா மகன் அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் மரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story