சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

X
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளி காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து காவலர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த நிலையில் இன்று சிவகங்கை எஸ்.பி அஷிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்.பி கூடுதலாக சிவகங்கை மாவட்டத்தை கவனத்திக் கொள்வார் என உள்துறைசெயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story

