பள்ளி மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு - உறவினர்கள் புகார்

X
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தனியார் பள்ளி (ஜெஸ்ரில் சிபிஎஸ்இ பள்ளி) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த பள்ளியில் மதுராபுரி வேங்கைபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் அஸ்விந்த் (7 வயது) என்கிற மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் காலை பள்ளி வாகனம் வராமல் காரில் வந்து அஸ்விந்த் மாணவனை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாலை பள்ளியில் இருந்து பெற்றோரை தொடர்பு கொண்டு மாணவனுக்கு வலிப்பு வந்ததாகவும், சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பதறி அடித்து வந்த மாணவனின் பெற்றோர் அரசு மருத்துவமனையில் பார்த்தபோது மாணவனின் வாயிலும் மூக்கிலும் ரத்தம் கசிந்தவாறு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து மாணவனின் பெற்றோர் கதறி அழுதனர். மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது அனைத்து எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிங்கம்புணரி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Next Story

