தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த எஸ்டிபிஐ

X
தேசிய மருத்துவர்கள் தினம் இன்று (ஜூலை 1) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு மருத்துவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இன்று நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி மகளிர் அணி நிர்வாகியான செய்யது அலி பாத்திமா மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவி ரஹீமாவை சந்தித்து பொன்னாடை போர்த்தி மருத்துவ பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார் .இதில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

