ராமநாதபுரம் எல்லை தாண்டி மீன் பிடித்த ஏழு மீனவர்கள் கைது

ராமநாதபுரம் எல்லை தாண்டி மீன் பிடித்த ஏழு மீனவர்கள் கைது
X
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேர் ஒரு படகுடன் கைது இலங்கை கடற்படை நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து இன்று காலை மீன்பிடிக்க சென்ற தங்கச்சி மடத்தை சேர்ந்த ஆரோக்கிய டேனியல் என்பரது விசைப்படகு மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடப்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அந்த படகையும் அதிலிருந்த தங்கச்சிமடம் சேர்ந்த பெரிக்.அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் சசிகுமார் சீனு ராமேஸ்வரத்தை சேர்ந்த முக்குரன் சரவணன் காளிதாஸ் செந்தில் என ஏழு பேரையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Next Story