கல்லூரியின் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

மதுரை விளாச்சேரியில் உள்ள கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தை போலீசார் நடத்தினார்கள்
, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (01.07.2025) மதுரை ஸௌராஷ்ட்ர கல்லூரியில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 199 வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், கல்லூரி மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள் என பலர் கொண்டனர்.
Next Story