பாண்டமங்கலம் பகுதியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

பாண்டமங்கலம் பகுதியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
X
பாண்டமங்கலம் பகுதியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், ஜூலை.2: பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம், சேவல்கட்டுமூலை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மகன் சங்கர் (29). இவர் டிப்ளமோ படித்து விட்டு வெற்றிலை கொடிக்கால் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சங்கர் மனமுடைந்த  நிலையில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. நேற்று மதியம் சங்கரின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருந்தது. கதவை பலமுறை தட்டியும் சங்கர் திறக்காததால் பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது சங்கர் வீட்டின் முன் பக்க வளாகத்தில் உள்ள மேற்கூரையில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று மகனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story