ராணிப்பேட்டையில் விவசாய நிலத்தில் சிவலிங்கம் கண்டெடுப்பு

X
ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் கலங்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சிவலிங்கம் உள்ள தாக ஆற்காடு தாசில்தார் மகாலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேரில் சென்ற தாசில்தார் மற்றும் வருவாய்த் துறையினர், தொல்லியல் துறை அலுவலர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது விவசாய நிலத்தின் வரப்பின் ஓரமாக சிவலிங்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து ஆற்காடு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வணங்கினார்கள்.
Next Story

