நகர்ப்புற சுகாதார மையத்தை திறந்து வைத்த அமைச்சர்

மதுரை கூடல் புதூர் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
தமிழக முதலமைச்சர் அவர்கள், சென்னையில் இருந்து காணொலி மூலம் மதுரை மாநகராட்சி எஸ்.ஆலங்குளத்தில் (கூடல்புதூர்) ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்துச் சிறப்பித்தார்கள். அதே சமயம் மதுரையில் அந்த நிகழ்ச்சியில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். உடன் உயர் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story