சங்கரன்கோவிலில் வாகனம் மோதி மூதாட்டி பலி

சங்கரன்கோவிலில் வாகனம் மோதி மூதாட்டி பலி
X
வாகனம் மோதி மூதாட்டி பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கழுகுமலை வட்டத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகள் தேவி (65). திருமணம் ஆகாத இவா், மனநலம் பாதிக்கப்பட்டவராம். சங்கரன்கோவில்- கழுகுமலை சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இத்தகவலறிந்த சங்கரன்கோவில் நகர காவல்நிலைய போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story