கருப்பூர் நகர தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்

கருப்பூர் நகர தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
X
தலைமைக்கழக பேச்சாளார் யோகா ஸ்ரீ பேசினார்
சேலம் ஓமலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழாவையொட்டி கருப்பூர் பேரூர் இளைஞர் அணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் சந்தைப்பேட்டை மைதானத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கருப்பூர் நகர செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார். ஓமலூர் ஒன்றிய செயலாளர் செல்வ குமரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அருண் பிரசன்னா, பேரூராட்சி தலைவி சுலோச்சனா, நகர துணைச்செயலாளர்கள் சரவணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர் யோகா ஸ்ரீ கலந்துகொண்டு தி.மு.க. அரசின் சாதனைகள், இலவச பஸ், மகளிர் உரிமைத்தொகை, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம் குறித்து பேசினார். இதில், என்ஜினீயர் உமா சங்கர், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், கணேசன், அருண், வார்டு கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story