ஆற்காடு மூலவாழி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிறைவு விழா

X
ஆற்காடு கிளைவ் பஜார் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூலவாழி அம்மன் ஆலயத்தில் இன்று இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் மூலவாழி அம்மன், விநாயகர், முருகர், சிவன் மற்றும் கன்னி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story

