ராமநாதபுரம் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மனு

ராமநாதபுரம் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மனு
X
கமுதி பேரூ ராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை காக்குடி ஊராட்சியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பல ஆண்டுகளாக தெற்கு முதுகுளத்தூர் சாலை குண்டாற்றுப் படுகையில் கொட்டி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பேரூராட்சி குப்பைகளை கமுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொட்டி வருகின்றனர். இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றனர். கடந்த வாரம் சிங்கப்புலியாபட்டிவிலக்கு சாலையில் குப்பைகளை கொட்டியதற்கு அக் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பேரூராட்சி அலுவல த கத்தில் மனு அளித்தனர். இந்த நிலையில் காக்குடி கிராமத்தில் அரசு தொடக் கப் பள்ளி அருகே கமுதி பேரூராட்சி குப்பைகள் கொட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காக்குடி கிராமத் தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் 10 நாட்களில் அங்கு குப்பை கொட்டுவதாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக புகார் மனு அளித்த மக்கள் தெரிவித்தனர்.
Next Story