வேளாண்மை - தோட்டக்கலைத் துறை சார்பில்

X
தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி, நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த விழுந்தமாவடி கிராம விவசாயிகளுக்கு தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. மக்களின் உடல் நலத்தை காக்க, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த பயறு வகை தானியங்களை மக்கள் உண்ண வேண்டும் என்ற உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூன்று பழ மர செடிகள் அடங்கிய பழ மரச் செடி தொகுப்பு, ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய காய்கறி விதைத் தொகுப்பு மற்றும் மர துவரை, காராமணி பயறு மற்றும் அவரை விதைகள் அடங்கிய பயறு வகை பயிர் விதை தொகுப்பு என மூன்று வகையான தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக, இத்திட்டம் கீழையூர் வட்டாரம் விழுந்தமாவடி கிராமத்தில், கீழையூர் வட்டார ஆத்மா தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். விழுந்தமாவடி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா இளம்பரிதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பழ மரச் செடிகள் தொகுப்பு, காய்கறி விதைகள் தொகுப்பு மற்றும் பயறு வகை பயிர் விதைகள் தொகுப்பு ஆகியவற்றை கீழையூர் வட்டார ஆத்மா தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் விவசாயிகளுக்கு வழங்கி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story

