முன்களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

X
மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மறுவாழ்வினை கருத்தில் கொண்டு, அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் குறித்த நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதிவுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இல்லம்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவுத்தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென மாவட்டத்தின் அனைத்து நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில், சுவஸ்திக் தொண்டு நிறுவன முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இக்கணக்கெடுப்புப் பணியானது வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இக்கணக்கெடுப்பு பணி மேற்கொள்வதற்கென தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story

