அரியலூர் ஆயுதப்படை போலீசார் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு

அரியலூர் ஆயுதப்படை போலீசார் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு
X
அரியலூர் ஆயுதப்படை போலீசார் மூலம்ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர், ஜூலை 5- அரியலூரிலுள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலுள்ள கூட்டரங்கில், காவல் துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் சீருடை அணிந்து ஆட்டோவை இயக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தவிர மக்களை ஏற்றக்கூடாது. சாலை பாதுகாப்பு விதிகளை மதிக்க வேண்டும். அதிவேகமாக ஓட்டக் கூடாது. மது அருந்தி விட்டு ஆட்டோக்களை இயக்கக் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். அரியலூர் நகர போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராமலிங்கம், உலகநாதன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story