காவல்துறை சார்பில் ரத்ததான முகாம்

X
அரியலூர், ஜூலை 5- அரியலூர் அரசு மருத்துவமனையில், மாவட்ட காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச் தொடக்கி வைத்தார். , காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என 25 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர்.அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரகுபதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், நகர காவல் ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ரத்தானம் அளித்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.
Next Story

