சின்னஆனந்தவாடி திரெüபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

சின்னஆனந்தவாடி திரெüபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
X
சின்னஆனந்தவாடி திரெüபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
அரியலூர், ஜூலை. 5- அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சின்ன ஆனந்தவாடி கிராமத்திலுள்ள திரெüபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா, கடந்த 15 நாள்களுக்கு முன்பு பாரதம் படிக்கும் நிகழ்வோடு தொடங்கியது. தினந்தோறும் கோயில் வளாகத்தில் பாரதம் படிக்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் திரெüபதியம்மன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில், பலரும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமித்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. :
Next Story