சேமிப்பு கிடங்கு, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் திறப்பு

சேமிப்பு கிடங்கு, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் திறப்பு
X
சேமிப்பு கிடங்கு, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையத்தினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அரியலூர், ஜூலை.5- அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, தா.பழூரில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம், விக்கிரங்கலத்தில் கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்கம் மையம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தா.பழூர் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து அவர், தா.பழூர் ஊராட்சியில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தினை தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதை, பழச்செடி மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)ராதாகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாலமுருகன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, வேளாண்மைத் துறை உதவி இயக்குநர்கள் சாந்தி, தமிழ்மணி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதே போல், அஸ்தினாபுரம், செந்துறை, கோவில் எசனை, தத்தனூர் மேற்கு, விளந்தை உள்ளிட்ட ஊராட்சிகளிலும் வேளாண் இயக்க விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டாரம் அஸ்தினாபுரம் ஊராட்சியிலும், செந்துறை வட்டாரம் செந்துறை ஊராட்சியிலும், திருமானூர் வட்டாரம் கோவில் எசனை ஊராட்சியிலும், ஜெயங்கொண்டம் வட்டாரம் தத்தனூர் மேற்கு ஊராட்சியிலும், ஆண்டிமடம் வட்டாரம் விளந்தை ஊராட்சியிலும், தா.பழூர் வட்டாரம் தா.பழூர் ஊராட்சியிலும் இன்றையதினம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் விழா நடைபெற்றது. இயக்கத்தின் மூலம், வேளாண்மை துறை வாயிலாக துவரை -5 கிராம், தட்டைப் பயிறு -10 கிராம், அவரை -10 கிராம் கொண்ட பயறு வகை விதை தொகுப்பு 3,000 எண்கள் மானியத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை வாயிலாக ரூ.60 மதிப்பிலான காய்கறி விதை தொகுப்பு (தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை மற்றும் கொத்த அவரை) 100 சதவீதம் மானியத்தில் மொத்தம் 23,000 காய்கறி விதை தொகுப்புகள் மானியத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று ரூ.100 மதிப்பிலான (பப்பாளி, கொய்யா மற்றும் எலுமிச்சை) பழச்செடிகள் தொகுப்பு 100 சதவீத மானிய விலையில் மொத்தம் 14,100 எண்கள் பழச்செடிகள் தொகுப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, அரியலூர் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் கீழ் ற்ய்ட்ர்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்/ந்ண்ற்/ என்ற இணையதளத்தில் அல்லது உழவர் செயலியில் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Next Story