பழனிக்கு நாட்டுச்சக்கரை வெல்லம் கொள்முதல்

பழனிக்கு நாட்டுச்சக்கரை வெல்லம் கொள்முதல்
X
பழனி முருகன் கோயிலுக்கு ரூ. 48.5 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை, வெல்லம் கொள்முதல்
பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ. 48.5 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் நேற்று முன் தினம் கொள்முதல் செய்யப்பட்டது. பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,045 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில், 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,910க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 2,955க்கும், விற்பனையானது.இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,670க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 2,715க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் எடையிலான 1,750 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ. 47 லட்சத்து 69 ஆயிரத்து 775 ஆகும்.இதேபோல, உருண்டை வெல்லம் முதல் தரம் 30 கிலோ சிப்பம், முதல் தரம், ஒரே விலையாக ரூ. 1,620 எனும் விலையில், 1,500 கிலோ எடையிலான 50 மூட்டைகள் விற்பனையாகின. இதன் மதிப்பு ரூ. 81 ஆயிரம் ஆகும்.நாட்டுச் சர்க்கரை, வெல்லம் இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ. 48 லட்சத்து 50 ஆயிரத்து 775க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story