பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை:

பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை:
X
பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜையை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், வட்டச் செயலாளர் பொன் பெருமாள், மாமன்ற உறுப்பினர் இசக்கி ராஜா, வட்டத் துணைச் செயலாளர் ஞானசேகரன், வட்ட பிரதிநிதி பால சுரேஷ், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் செல்வலட்சுமி, பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story