வேலூர் கோட்டையில் தீ விபத்து!

X
வேலூர் மாவட்டம் மக்கான் சிக்னல் அருகே வேலூர் கோட்டை அகழியையொட்டி உள்ள பகுதிகளில் காய்ந்த புற்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.தீ பற்றி எரிந்ததால், அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
Next Story

