கடையநல்லூரில் திமுக ஆட்சி தொடர வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

கடையநல்லூரில் திமுக ஆட்சி தொடர வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
X
திமுக ஆட்சி தொடர வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா் மொகிதீனுக்கு தகைசால் தமிழறிஞா் விருது அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாவட்டந்தோறும் மாநாடு நடத்தப்பட்டு, அதில் சமூக நல்லிணக்கத்துக்கான உழைத்துவரும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதப் பெரியவா்களுக்கு விருது வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி தென்காசி மாவட்ட மாநாடு கடையநல்லூரில் அக். 5இல் நடைபெறும். இதில், காதா் மொகிதீன் பங்கேற்கிறாா். கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கும் அழைப்பு விடுக்க உள்ளோம். மதவாதக் கட்சிகளுக்கு எதிராக திமுகவுக்கு வாக்களித்தால்தான் மதவாதம் தமிழகத்துக்குள் நுழையாது என்பதில் முஸ்லிம் லீக் உறுதியாக உள்ளது. சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றாா் அவா்.
Next Story