திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம். உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா?

X
மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இக்கோயிலில் நடக்க உள்ள கும்பாபிஷே கத்தில் பங்கேற்க மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சம் பக்தர்கள் பாதயாத்திரை, வாகனங்கள் மூலம் திருப்பரங்குன்றத்திற்கு வருவார்கள்.இதனால் பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள் செல்வோருக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து இடையூறு ஏற்படும். திருச்செந்துார் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுப்பு அறிவித்ததை போல திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்திற்கும் உள்ளூர் விடுப்பு அறிவிக்க வேண்டும் என இந்து மக்கள் மாவட்ட தலைவர் சோலைக் கண்ணன், மற்றும் வி.எச்.பி மாநில துணை செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

