கோவை: நடைபாதை வியாபாரியிடம் எழுமிச்சை வாங்கிய எடப்பாடி !
2026 சட்டசபை தேர்தலையொட்டி கோவை பந்தய சாலையில் நடைபயண பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, பொதுமக்களோடு நேரடியாக சந்தித்து அவர்களது வாழ்வாதார நிலை பற்றி கேட்டறிந்தார். அப்போது, சாலையோரத்தில் வியாபாரம் செய்துவந்த ஒரு நடைபாதை வியாபாரியிடம் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று 100 ரூபாய் கொடுத்து 20 எலுமிச்சம்பழங்களை வாங்கினார். வியாபாரியின் விற்பனை நிலை மற்றும் வருமானத்தைக் குறித்து அவர் கேட்டு அறிந்ததுடன், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு அரசின் ஆதரவு தேவையை அங்கு குறிப்பிட்டார்.
Next Story




