ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு
கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களில் பொழியும் கன மழை காரணமாக கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்று வரை 50,000 கனஅடியாக இருந்த நீர் வரத்து ஜூலை 08 இன்று காலை 9 மணி அளவில் 28,000 கனஅடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.
Next Story





