தேன்கனிக்கோட்டை அருகே தூக்கிட்டு தற்கொலை கட்டிட தொழிலாளி.

X
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெல்லட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (40) கட்டிட தொழிலாளியான. இவர் ஒசூர் அடுத்த சின்ன எலசகிரி பகுதியில் தங்கி உள்ளார். இவர் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் நேற்று முன்தினம் சந்திரனின் மனைவி வீட்டிற்கு வந்தார். அப்போது சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சிப்காட் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

