கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழா: நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்.
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழா: நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம். தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரனாகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நேற்று மாலை ஆனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு, பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத வளர்பிறை பிரதோஷ விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story






