மரத்தை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை!

X
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் எதிரே உள்ள மைதானம் அருகில் வாடிய நிலையில் மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. அந்தப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் காலையில் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் துறை சார்ந்த அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story

