அமராவதி பாலத்தில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து. தந்தை மகள் படுகாயம்.
அமராவதி பாலத்தில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து. தந்தை மகள் படுகாயம். கரூர் மாவட்டம் அப்பி பாளையம் அருகே கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன் வயது 34. இவரது மகள் மகிழினி வயது 8, இருவரும் ஜூலை 7-ம் தேதி மாலை 6:30 மணி அளவில் சேலம் - மதுரை சாலையில் டூ வீலரில் சென்றனர். இவர்களது வாகனம் பழைய சுக்காலியூர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் செல்லும்போது , அதே சாலையில் பின்னால் வந்த கரூர் தெற்கு வெள்ளியணை அருகில் உள்ள பள்ள சங்கனூர் பகுதியைச் சேர்ந்த முருகன் வயது 49 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி , அன்பரசன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது . இதில் நிலை தடுமாறி டூவீலருடன் கீழே விழுந்ததில் தந்தை , மகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அன்பரசன் அளித்த புகாரில் லாரியை வேகமாகவும்,அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம்காவல்துறையினர்.
Next Story




