விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து.*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு (50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன கடை பஜார் பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் பணி முடிந்து திரும்பிய பொழுது திடீரென வந்த ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி கணேஷ் ( 31) என்பவர் மருத்துவர் ரமேஷ் பாபுவை இழுத்து போட்டு கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கத்தியால் குத்திய நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவருக்கு மூன்று இடங்களில் வெட்டு காயங்கள் பெற்றுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவரை கத்தியால் குத்திய நபரை கைது செய்தனர். விசாரணையில் கத்தியால் குத்திய நபர் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிய கணேஷ் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்தவர் என்பது மருத்துவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

