அரியலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

X
அரியலூர், ஜூலை 9- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியர் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்,. தடுப்பூசி செலுத்தும் பணியினை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. கிராமங்களில் உடனடியாக சுகாதார செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு நிலை }1 பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு அந்த கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ப.எஸ்தர்ராஜகுமார் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில துணைத் தலைவர் ரா.வசந்தா, மாநில அமைப்புச் செயலர் ஆ.பாலாம்பிகை, மாவட்ட துணைத் தலைவர் ரா.இந்திராணி, மாவட்டச் செயலர் அ.ராஜகுமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர். :
Next Story

