குமாரபாளையம் சமூக சேவகர்,எஸ்.எஸ்.எம்.மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் .இளவரசுவின் மூன்றாமாண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கபட்டது.

X
Komarapalayam King 24x7 |9 July 2025 10:27 PM ISTசமூக சேவகருக்கு மூன்றாம்ஆண்டு நினைவஞ்சலி
குமாரபாளையம் சமூக சேவகர், எஸ்.எஸ்.எம்.மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் .இளவரசுவின் மூன்றாமாண்டு நினைவு நாளில், விடியல் ஆரம்பம் சார்பாக, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில்,நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இளவரசன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மறைந்த இளவரசன் கல்விப் பணியில் சமுதாயப் பணியில் செய்த உதவிகளையும் சேவைகளையும் கல்விக்காக அளித்த உதவிகளை பற்றி பிரகாஷ் நினைவு கூர்ந்தார். தி.மு.க. பொறுப்புக்குழு துணைத் தலைவர் ரவி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சித்ரா, பஞ்சாலை ஓட்டல் அதிபர் ராஜ்குமார், முத்து, ஜமுனா, சுஜாதா உள்பட பலர் பங்கேற்று, இளவரசனின் சமூக பணிகள் குறித்து பேசினர். இளவரசு நினைவாக மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
Next Story
