உத்திரமேரூர் ஸ்ரீ மண்ணுடையம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் விழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் கருவேப்பம்பூண்டி கிராமத்தில் பழமையான அருள்மிகு ஶ்ரீ மண்ணுடையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சிறிய ஆலயமாக இருந்த நிலையில் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பெரிய ஆலயமாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு ஆலயத்தில் புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து இன்று கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மண்ணுடையம்மன் ஆலய வளாகத்தில் யாக வேள்வி சாலை அமைக்கப்பட்டு மகா கணபதி பூஜை, நவகிரக ஹோமம், வாஸ்து பூஜை, கோ பூஜை ,நாடி சந்தானம், பூர்ணாஹூதி உள்ளிட்ட யாக கால பூஜைகள் நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து, இசை வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் கடம் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வந்து விமான கோபுரத்தில் பூஜிக்கப்பட்ட கலச நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றி தீபாராதனைகள் காண்பித்து கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். தொடர்ந்து,மூலவர் மண்ணுடையம்மன் மேல் புனித கலச நீர் ஊற்றி தீபாராதனைகள் நடந்தது. பின்னர், பக்தர்கள் மேல் புனித தெளித்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொண்டு அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story



