போச்சம்பள்ளி அருகே பள்ளிக்கு வழிபாதை கேட்டு பொதுமக்கள் தர்ணா.

X
போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லகுட்டபட்டி ஊராட்சியில் உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தில் தொடக்கப்பள்ளிக்கு செல்லும் வழிபாதையை தனி நபர் வேலி போட்டு அடைத்து நிலம் எனக்கு சொந்தம் என்று கூறியதால் மாணவர்கள் பாதை வழியில்லாமல் அவதிப்பட்டு வருகிறனர். இதனால் இன்று அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பள்ளி முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பாரூர் இன்ஸ்பெக்டர் சிவ சந்தர் மற்றும் வட்டாட்சியர் சத்யா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story

