மாணவிகளிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரையில் பள்ளி மாணவர்களுடைய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள, CEOA மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 205 வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story