நிலத்திருந்த மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மூதாட்டி குடும்பத்தினருடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா.

நிலத்திருந்த மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மூதாட்டி குடும்பத்தினருடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா.
X
நிலத்திருந்த மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மூதாட்டி குடும்பத்தினருடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தை போலிபட்டா மூலம் அபகரிக்க முயற்சி செய்து நிலத்திருந்த மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மூதாட்டி குடும்பத்தினருடன் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம், குறவன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவபாக்கியம். இவரது கணவர் செல்வராஜ். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளான். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணம் முடிந்த நிலையில் செல்வராஜ் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலையில், சிவபாக்கியம் தனது மகன் மற்றும் மருமகளுடன் நிலத்திலேயே குடிசை கட்டி வாழ்ந்து வருகிறார். இவர்களது நிலத்தை உருவினராக பெருமாள் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் உறவினர் வெங்கடாச்சலம் பெயருக்கு நிலத்தை பதிவு செய்துள்ளார். இதனை அறிந்து சிவபாக்கியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சிவபாக்கியத்திற்கு நிலம் சொந்தம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்காமல், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தந்தை கோபால் மற்றும் அவரது ஆட்கள் தொடர்ந்து சிவபாக்கியம் மூதாட்டியை தொல்லை கொடுத்த வந்ததால் கடந்த 8 நாட்களாக பிரச்சனை குறித்து சிவபாக்கியம் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்து சென்று வந்துள்ளார். ஆனால் சட்டமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக காவல்துறையினர் புகாரை பெறாமல் வந்ததாக கூறப்படுகிறது. . இதே போல் சிவாபாக்கியம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார், ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது, இந்நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினரின் தந்தை கோபால் மற்றும் அவரது ஆட்கள் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் இதர மரங்களை வெட்டியும், நிலத்தில் டிராக்டர் மூலமாக ஏர் ஒட்டியுள்ளார். அப்போது சிவபாக்கியம், நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவதாக பூங்குளம் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளிக்க சென்ற போது, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் அவர் குடும்பத்தினருடன், கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்காயம் காவல்துறையினர் சிவபாக்கியத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் கேட்டபோது:- எனக்கும் இந்த பிரச்சனைக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சிவபாக்கியம் உறவினர் பெருமாள் விவசாய நிலத்தை என்னுடைய அக்கா கணவர் வெங்கடேசனுக்கு விற்றுள்ளார். என்னுடைய அக்கா என்பதால் இந்த பிரச்சனையில் என்னை கோர்க்க பார்க்கின்றனர். 6 மாதத்திற்கு முன்பு நிலம் முறைப்படி பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். பட்டியலின குடும்பத்தினரின் நிலத்தை அபகரிக்க முயற்சித்து, நிலத்திலிருந்த மரங்களை வெட்டிய சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story